கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் சரியான முறையான மருத்துவம் மேற்கொண்டால் நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருவது சாத்தியமானது. அவ்வாறு மீண்டு வந்தவர்கள் 102 நாட்களுக்கு RT -PCR ஆன்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா தொற்று:
2019 ம் ஆண்டு முதல் மக்களை தாக்கி வரும் அபாயகரமான வைரஸ் என அழைக்கப்படுவது கொரோனா வைரஸ். தற்போது கொரோனா தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என பரவி வருகிறது. நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாமல் தவிர்க்க கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாக வைப்பது முகக்கவசம் அணிவது எனவும் இருப்பது அவசியம். மேலும் சமூக இடைவெளியுடன் இருப்பதன் மூலம் நோய்பரவலை தவிர்க்கலாம்.
அவ்வாறு நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களும் முறையான மருத்துவத்தின் மூலம் குணமடையலாம். நோய்த்தொற்றின் பாதிப்பால் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து காணப்படும். எனவே சத்தான உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடலை பாதுகாத்துக்கொள்ளலாம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தனிமைப்படுத்தப்பட்டு, மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்வதன் மூலம் நோய்தாக்கத்திலிருந்து விடுபடலாம். அவ்வாறு நோய் தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் 102 நாட்கள் வரை RT -PCR ஆன்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அறிவுறுத்துகிறது.