இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்கும் வகையில் டிஆர்.தி.ஓ வின் 2டிஜி என்னும் மருந்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. தற்போது அந்த மருந்திற்கான விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
2டிஜி மருந்து:
இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேல் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாட்டில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு கொரோனாவிற்கு எதிரான புதிய மருந்திற்கு ஒப்புதல் அளித்து வருகிறது. அதன்படி டி.ஆர்.டி.ஓ வின் 2டிஜி மருந்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த மருந்து பொடி வடிவில் அமைந்திருக்கும், அதனை தண்ணீரில் கலந்து உண்ண வேண்டும் என்றும் இந்த மருந்தினை அறிகுறி உள்ளவர்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு வைரஸ் தீவிரமடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் இந்த மருந்து எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாது என்றும் இதனால் நோயாளிகள் ஆக்சிசனுக்கு துன்பப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதற்கட்ட மருந்துகள் விநியோகிக்கப்பட்ட நிலையில் இதன் இரண்டாவது கட்டமாக நாளை 10,000 மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் இந்த மருந்தின் விலை ரூ.990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. மருந்தின் விலையை அறிந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.