உலகம் முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மிக அதிகமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெம்டெசிவர் மருந்தின் உற்பத்தி 119 லட்சமாக அதிகரிப்பு..! மத்திய அரசு தகவல்..!
கொரோனா அலை:
இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா நோய்த்தொற்று கோர தாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலை இரண்டாம் அலை என சுமார் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது கொரோனா வைரஸ். இதன் காரணமாக தற்போது பாதிப்பின் எண்ணிக்கையை போல் உயிரிழப்பின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக பிரேசில் நாட்டில் மிக அதிக அளவில் கொரோனாவின் தாக்கம் காணப்பட்டு வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அங்கு கொரோனாவின் முதல் அலையில் வயதானவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இதன் இரண்டாவது அலையில் முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்தை நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்படி அவர்கள் கூறியதாவது, கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை சுமார் 832 குழந்தைகள் கொரோனவினால் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.