ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை வருகிற மே மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மாநில முதல்வர் அதிரடியாக அறிவித்தார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநிலமும் மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கொரோனாவை விரட்டும் வகையில் தடுப்பூசிகள் வழங்கும் பணிகளும் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.மேலும் சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் வராத காரணத்தினால் கட்டுப்பாடுகள் மிக கடுமையாக்கப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
அந்த வகையில் தற்போது கேரளா மாநிலத்தில் குறிப்பிட்ட 4 மாவட்டத்தில் ட்ரிபிள் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது ஆந்திர மாநிலத்திலும் ஊரடங்கு நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.அங்கு ஏற்கனவே தற்போது கொரோனா எதிரொலி காரணமாக ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. தற்போது இதனை ஆந்திர அரசு நீட்டித்துள்ளது. அதன்படி அங்கு வருகிற மே மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.