இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவிவருவதை அடுத்து இந்திய அரசாங்கம் நோய் பரவலை தடுக்க பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சீன அரசு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் COVID19 மருத்துவ கருவிகளின் விலையை உயர்த்தியுள்ளது.
சீன உற்பத்தியாளர்கள் இந்தியாவில் நிலவி வரும் அதிகப்படியான மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதால் , இந்திய நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் சில கோவிட் -19 மருத்துவ பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.இந்திய ஜெனரல் பிரியங்கா சவுகான் மருத்துவ கருவிகளின் விலைகளை சீராக வைத்திருக்குமாறும், ஏன் இந்த திடீர் விலை உயர்வு என்று எழுப்பிய கேள்விக்கு சீன செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பதில் அளித்துள்ளார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அவர் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, சீன நிறுவனங்கள், இந்தியாவுக்கு 10 டன்களுக்கும் அதிகமான COVID19 மருத்துவ பொருட்களை வழங்கியுள்ளன, 20 டன்களுக்கும் அதிகமான பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் மாதத்தில், சீனா 26,000 க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள், 3800 டன் அளவிலான மருந்து பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது