தமிழ் சினிமா நடிகையான ரைசா தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அனைவரும் அதிர்ச்சி அடைவது போல ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். சரும டிரீட்மெண்டுக்காக சென்ற ரைசாவிற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்று அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை ரைசா
மாடலிங் துறையில் இருந்து தான் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் நுழைந்து ரசிகர்கள் மனதில் தங்களுக்கு என்ற ஒரு இடத்தினை பிடித்து கொள்கின்றனர். அப்படி மாடலிங் துறையில் இருந்து வந்தவர் தான், நடிகை ரைசா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருந்துள்ளார். ஆனால், மாடலிங் துறையின் மேல் இருந்த ஆர்வத்தால் இவர் பல போட்டிகளில் பங்கு பெற்றுள்ளார்.
‘வயதாகிவிட்டது என்பதை உணர்கிறேன்’ – தல தோனி உருக்கம்!!
ஒரு போட்டியில் இவர் “சிறந்த சிரிப்பழகி” என்ற பட்டத்தினை பெற்றுள்ளார். பின், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் 63 நாட்கள் இருந்த ஒரே பெண் போட்டியாளர் இவர் தான். பின், இவர் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் “பியார் பிரேமா காதல்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்திற்காக இவர் “சிறந்த அறிமுக நடிகை” என்று பிலிம் பார் விருதினை வென்றுள்ளார்.
இப்படியாக இருங்க, இவர் நேற்று தனது சரும பராம்பரிப்பிற்காக ஒருவரை நாடியுள்ளார். அங்கு இவர் வேண்டாம் என்று கூறியும் ஒரு டிரீட்மெண்டை செய்ய வற்புறுத்தியுள்ளார். பின், காலையில் எழுந்து பார்க்கும் போது ரைசாவின் முகம் புகைப்படத்தில் உள்ளது போல வீங்கி உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது குறித்து அவர் அந்த நிறுவன உரிமையாளரிடம் கேட்க போகும் போது அவர் சரியாய் பதில் அளிக்கவில்லையாம். இதனை ரைசா தனது இன்ஸ்டாகிராம பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.