‘வயதாகிவிட்டது என்பதை உணர்கிறேன்’ – தல தோனி உருக்கம்!!

0

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் மெகா தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தனது 200வது போட்டியை சிஎஸ்கே அணிக்காக நேற்று தல தோனி விளையாடியுள்ளார். தற்போது இது குறித்து பேசியுள்ளார் தோனி.

தல தோனி

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஐபிஎல் தொடரை ரசிகர்கள் இன்றி துபாய் மைதானத்தில் சிறப்பாக நடத்தினர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது இந்த ஆண்டும் ரசிகர்கள் அனுமதியின்றி ஐபிஎல் மெகா தொடரை நடத்தி வருகின்றனர். கடந்த தொடரில் சிஎஸ்கே சொதப்பியது அனைவருக்கும் நினைவிருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

லீக் சுற்றுடன் சென்னை அணி வெளியேறிய முதல் தொடர் கடந்த ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியான காம்பேக்கை கொடுக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சென்னை அணி இந்த தொடரின் முதல் போட்டியிலே தோல்வியை தழுவியது. இது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றமடைய செய்தது.

இந்நிலையில் சென்னை அணி தனது இரண்டாவது போட்டியாக பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி நேற்றைய போட்டியில் சென்னையிடம் 106 ரன்னுக்கு சுருண்டது. குறிப்பாக நேற்று சென்னை அணியின் தீபக் சாகர் மிக சிறப்பாக பந்துவீசி அசத்தினார். சென்னை அணியின் இந்த கம்பேக்கினால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நேற்றைய போட்டி மிக சிறப்புமிக்க போட்டியாகும்.

ரசிகர்கள் வெள்ளத்தில் சின்ன கலைவாணரின் இறுதி ஊர்வலம் – விருகம்பாக்கத்தை நோக்கி பயணம்!!

காரணம் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடும் 200வது போட்டியாகும். தற்போது இதுகுறித்து பேசிய தோனி, மிக வயதானவன் என்னும் உணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. இது மிக நீண்ட பயணம். கடந்த 2008ம் ஆண்டு முதல் தென் ஆப்ரிக்கா, துபாய் மற்றும் இந்தியாவில் விளையாடி வருகிறேன். என் 200வது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என்பதை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தோனியின் 200வது போட்டியில் சென்னை வென்றது ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here