விஜய் தொலைக்காட்சியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் “அன்புடன் குஷி”. இந்த சீரியலின் ஹீரோயின் விலகியதை அடுத்து தற்போது அதில் பிரபலமான சீரியல் நடிகை ஒருவர் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அன்புடன் குஷி சீரியல்
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் “அன்புடன் குஷி” இந்த சீரியல் மற்ற சீரியல்களில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தது என்று தான் கூற வேண்டும். அதே போல் இந்த சீரியலில் தற்போது நாயகன் மற்றும் கதாநாயகிக்கு இடையே காதல் காட்சிகள் நடைபெற்று வருகின்றது.
டேஸ்டியான “பன்னீர் பட்டர் மசாலா” – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!
இந்த சீரியலில் செண்டிமெண்ட், காதல் மற்றும் சண்டை காட்சிகள் என்று அனைத்தும் கலவையாக இடம் பெற்றிருந்தது. இதனால் இந்த சீரியலிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக, இந்த சீரியலில் நாயகியாக நடித்த ரேஷ்மாவை அனைவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. அவரது எதார்த்தமான நடிப்பின் காரணமாக இந்த சீரியல் டாப் ரேட்டிங்கில் இருந்தது. இப்படியாக இருக்க இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வலைதளப்பக்கத்தில் தான் “அன்புடன் குஷி” சீரியலில் இருந்து விலக போவதாக தெரிவித்தார். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் சோகம் அடைந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இனி இந்த சீரியலில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இப்படியாக இருக்க இந்த சீரியலில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “திருமணம்” என்ற சீரியல் மூலமாக பிரபலமடைந்த ஸ்ரேயா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகின்றது.