விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிரை படிக்க வைக்க முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஐஸ்வர்யாவிடம் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏற்கனவே முல்லை இதனை பார்த்து விடுகிறார். முல்லையும் கதிரும் கண்ணனை கண்டித்து வைத்தனர்.
இந்நிலையில் அடுத்ததாக மூர்த்தியும் பார்த்து விடுகிறார். கண்ணனை அழைத்து இப்படி எல்லாம் செய்வது தவறு. கடைசியில் அண்ணன் இப்படி வளர்ந்தார் என்ற கெட்ட பெயர் வந்து விடும் என்று அறிவுரை கூறுகிறார். பதிலுக்கு கண்ணன் அவரை கலாய்க்க கோவமடையும் மூர்த்தி திட்டி விட்டு செல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அடுத்ததாக முல்லை கதிரை 4 மணிக்கு எழுப்பி படிக்க வைக்கிறார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் டீ போட்டு கொடுத்து படிக்க வைக்கிறார். மேலும் நீங்க ஜெயிக்க பொறந்தவங்க என்று கூறி மோட்டிவேஷன் செய்கிறார். இதனால் மேலும் படிக்க ஆரம்பிக்கிறார்.
ஜோடியா விஜய் டிவிக்கு வந்துட்டீங்களா?? புதிய சீரியலில் களமிறங்கும் “திருமணம்” ஸ்ரேயா!!
அடிக்கடி கதிர் தூங்கி விட முல்லை மிரட்டி எழுப்பி படிக்க வைக்கிறார். முல்லை அவசரப்பட்டு சத்தமாக படிக்க ஆரம்பிக்க வீட்டில் உள்ள அனைவரும் வந்து விடுகின்றனர். வேகமாக புக்கை எடுத்து ஒளித்து வைக்கின்றனர். மீனா துருவி துருவி கேள்வி கேட்கிறார்.
தனமும் கேள்வி கேட்க எப்படியோ முல்லை சமாளிக்கிறார். ஆனால் கண்ணனும், மீனாவும் இதனை நம்புவதாக இல்லை. சந்தேகத்துடனேயே வெளியே செல்கின்றனர். அடுத்தடுத்து லட்சியத்தோடு கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று சொல்ல கதிர் அதிர்ச்சியாக முல்லையை பார்க்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.