சைவ பிரியர்களுக்கு பன்னீர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், ஹோட்டலில் செய்வது போல பன்னீர் வைத்து வித்தியாசமான முறையில் தான் சமைக்க தெரியாது. இதனை அடுத்து இன்று சுவையான “பன்னீர் பட்டர் மசாலா” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
தேவையான பொருட்கள்
- பன்னீர் – 200 கிராம்
- வெண்ணை – 2 டீஸ்பூன்
- சீரகம் – 2 டீஸ்பூன்
- ஏலக்காய் – 1
- கிராம்பு – 2
- பட்டை – 2
- பிரியாணி இலை – 1
- வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- மல்லி தூள் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தயிர் – 1/4 கப்
- கொத்தமல்லி – தேவையான அளவிற்கு
செய்முறை
முதலில், ஒரு சட்டியினை காய வைத்து அதில் வெண்ணை ஊற்ற வேண்டும். வெண்ணை கரைந்ததும் அதில், எடுத்து வைத்துள்ள சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு கிளற வேண்டும். நன்றாக வதங்கியதும் அதில் வெங்காயம் சேர்க்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தக்காளி சேர்க்க வேண்டும். இந்த கலவையை நன்றாக கிண்டி விட்டு கொண்டே இருக்க வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நன்றாக வதங்கியதும், இதில் கடைசியாக பன்னீர் சேர்க்க வேண்டும். பின், பிரெஷ் கிரீம் சேர்த்து கிண்டி விட வேண்டும். 6 முதல் 7 நிமிடங்களுக்கு பிறகு, இதில் கொத்தமல்லி சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். சூடாக சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறலாம். அவ்ளோ தான்!!