கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கும் “இதயத்தை திருடாதே” சீரியலில் சிவா சஹானாவிற்கு இன்ப அதிர்ச்சியாக ஒரு பரிசினை கொடுக்க விழைகிறார். அதே போல் சிவாவின் அம்மா பவானி சஹானாவை தனியாக கோவிலுக்கு அழைத்து செல்கிறார்.
இதயத்தை திருடாதே
இன்று மக்கள் மத்தியில் சில சீரியல்கள் மட்டுமே பிரபலமாக ஒளிபரப்பாகி வருகின்றது. குறிப்பாக, கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் காதல் காட்சிகள் உள்ள சீரியல்களுக்கு தான் இன்று மவுஸ் அதிகம். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான், “இதயத்தை திருடாதே” இந்த சீரியலில் தற்போது சிவா மற்றும் சஹானா இருவரும் தாங்கள் நடன போட்டியில் வென்ற வீட்டிற்கு குடும்பத்தினருடன் குடி புகுந்து விட்டனர்.
பூவே உனக்காக சீரியல் பூவரசி பற்றி தெரியாத மர்மங்கள் – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!
இப்படியாக இருக்க சஹான்வின் முன்னாள் காதலன் பார்த்தசாரதி உயிருடன் தான் இருக்கிறார் என்று இன்ஸ்பெக்டர் வெற்றிக்கு சந்தேகம் வருகின்றது. அதே போல் சிவா பார்த்தசாரதியின் அம்மாவிடம் சென்று பார்த்தசாரதி உயிருடன் இருப்பதாக தெரிவிக்கிறார். இதனை கேட்டு கோவம் அடையும் அவர் சிவாவை நன்றாக திட்டி விடுகிறார். சிவா எவ்வளவோ சொல்லி பாத்தும் அவர் அதனை மறுத்து விடுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியாக இருக்க சிவா சஹானாவிற்கு ஒரு பரிசு கொடுக்க முடிவு எடுத்து, அதற்காக சஹானாவை அழைத்தும் செல்கிறார். இது இப்படியாக இருக்க சிவாவின் அம்மா பவானி வீட்டில் அனைத்து வேலைகளையும் தானாகவே செய்கிறார். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் ஆச்சரியம் அடைகின்றது. பவானி சஹானாவை தனியாக கோவிலுக்கு அழைத்து செல்கிறார். அவரது திடீர் மாற்றம் எதற்காக என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை.