கர்நாடகாவின் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் சர்ச்சைக்குரிய ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது பதவியை ராஜினாமா கோரி செய்ய காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாசமான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இணையத்தில் வெளியான வீடியோவில், ஓட்டல் ஒன்றிலுள்ள படுக்கை அறையில், மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, ஒரு இளம்பெண்ணுடன் அரைகுறை ஆடையில் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. வீடியோவில் மந்திரியின் முகம் தெளிவாக தெரிகிறது. மந்திரியின் ஆபாச காட்சிகள் மட்டுமல்லாது, அந்த பெண்ணுடன் அவர் உரையாடிய ஆடியோ பதிவும் தற்போது வெளியாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த காணொளி குறித்து சமூக ஆர்வலரான தினேஷ் கல்லஹள்ளி என்பவர், பெங்களூர் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். பின்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘வடக்கு கர்நாடக பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அணைகள் குறித்து ஆவணப்படம் எடுப்பதற்காக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியை அணுகியுள்ளார். அந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் மந்திரி. மேலும் அந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தராமல் அவரை ஏமாற்றியுள்ளார்.
இருவரும் சேர்ந்திருந்த ஆபாச வீடியோ அந்த பெண்ணிடம் இருப்பதை தெரிந்து கொண்ட மந்திரி, அந்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்’ என கூறினார். தற்போது வெளியான மந்திரியின் ஆபாச வீடியோ கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மந்திரி தனது பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.