நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது தயாராகி கொண்டு இருக்கும் படம் தான் “கர்ணன்” இந்த படத்தின் தேனிசை தென்றல் தேவா குரலில் வெளியான நாட்டுப்புற பாடல் அனைவரையும் ஈர்த்துள்ளது. இதனை அடுத்து இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும் பெற்றுள்ளது.
கர்ணன் திரைப்படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் தான் “கர்ணன்”. இந்த படத்தினை இயக்குனர் மாரி செல்வராஜன் இயக்கி வருகிறார். இசையினை சந்தோஷ் நாராயணன் பார்த்து கொள்கிறார். இந்த இருவரது கூட்டணியில் உருவான “பரியேறும் பெருமாள்” திரைப்படம் ஏற்கனவே பெரும் வெற்றியை உருவாக்கி கொடுத்ததை அடுத்து தற்போது மீண்டும் இருவரது கூட்டணி இணைத்துள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் நாட்டுப்புறப் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் பாடியுள்ளார்.
பிங்க் நிற உடையில் பார்பி டால் போல ஜொலிக்கும் அனிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!
‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற அந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இது இப்படியாக இருக்க இந்த படத்தின் இரெண்டாவது பாடலான “பண்டாரத்தி புராணம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த பாடலில் பல சிறப்புக்கள் உள்ளது என்று கூட சொல்லலாம். இந்த பாடலை “தேனிசை தென்றல்” தேவா பாடியுள்ளார். இத்துடன் இந்த பாடலில் ஏழை கணவன் தனது மனைவியின் மரணத்தை தாங்க முடியாமல் பாடுவது போல் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதன் முறையாக, தமிழ் சினிமாவில் ஒரு கணவன் தனது மனைவியின் மரணத்தை தாங்க முடியாமல் பாடுவது போல் இந்த பாடல் அமைந்துள்ளது. கூடுதல், சிறப்பாக தனுஷ் தனது எதார்த்தமான நடிப்பின் மூலமாக அனைவரையும் கவர்ந்துள்ளார். இதனை அடுத்து இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.