அனிருத் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இடையே காதல் இருப்பதாக சமூகவலைதளத்தில் கடந்த சில நாட்களாக புரளிகள் எழுந்து வந்தது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் தான் இவருக்கு தமிழில் முதல் படமாகும். தொடர்ந்து ‘ரஜினிமுருகன்’, ‘ரெமோ’, ‘பைரவா’, ‘தானா சேந்த கூட்டம்’, ‘மகாநதி’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவரது அருமையான பேச்சுக்கும் அழகான சிரிப்புக்கும் தமிழ்நாட்டில் எக்கச்சக்க ரசிகர்கள் உண்டு.
கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த ‘ரெமோ’ திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தில் உள்ள ஒரு பாடலுக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் ஆகியோர் நடித்திருப்பார்கள்.
‘பிரியமானவளே’ பாடலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருடன் ஆடிய டிடி – வைரலாகும் வீடியோ!!
சமீபத்தில் அனிருத்துடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளத்தில் வெளியாகி பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது. அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இது குறித்து அனிருத் மற்றும் கீர்த்தி தரப்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்து வந்தது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா அவருக்கு மருதாணி வைப்பது போல் எடுத்துள்ள புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ‘தூய்மையான அன்பின் வடிவம்’ என்று குறிப்பிட்டுள்ளார் கீர்த்தி. அவரது இந்த பதிவு சர்ச்சைகளுக்கெல்லாம் பதிலாக அமைந்துள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.