தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான நடிகையாக கருதப்படும் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் வந்த வண்ணம் உள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் திரைப்படங்களை பொறுத்தவரை கதாநாயகிகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு கிடைக்கும் சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி தான் அவர்கள் தங்கள் திறமை மற்றும் நடிப்பினை வெளிப்படுத்த முடியும். அப்படி தனக்கு கிடைத்த சிறு வாய்ப்பினையும் பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான், நடிகை கீர்த்தி சுரேஷ்.
முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயன் உடன் “ரஜினி முருகன்” படத்தில் தான் அறிமுகமானார். அதற்கு பின்பு முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம் மற்றும் சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்து விட்டார்.
தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவிலும் கால் பதித்து முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். இத்தனை படங்கள் நடித்திருந்தாலும் அவருக்கு திருப்புமுனையாக இருந்த படம், “மகாநதி”. பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்கை கதை தான் இந்த படம். இந்த படத்தில் அப்படியே சாவித்திரியை உரித்து வைத்திருப்பார், கீர்த்தி சுரேஷ்.
இதனால் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பொது முடக்கத்தில் உடல் எடையினை குறைந்து ஆள் அடையாளமே இல்லாமல் இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துஇருந்தனர்.
அதே போல் இந்த பொது முடக்கத்தின் போது அனைவரும் தெரிந்து கொண்டது கீர்த்தி சுரேஷிற்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது தான். பல நாட்களுக்கு பின்பு தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.