டிசம்பர் 27 ஆம் தேதி முதல் லாரி ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு ஆதரவாக சரக்கிற்கான புக்கிங் வரும் 26 ஆம் தேதி முதலே நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளன தலைவர் பேட்டியளித்துள்ளார். இந்த அறிவிப்பு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காலவரையற்ற போராட்டம்:
தமிழகத்தில் வரும் 27 ஆம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற ஸ்டிரைக் நடைபெறும் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு தற்போது குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து தான் ஜிபிஎஸ் கருவி பெற வேண்டும், வேகக்கட்டுப்பாட்டு, காலாண்டு வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் நடைபெறும் என்று கூறப்பட்டது. கூடுதலாக, லாரிகள் மீது செலுத்தப்படும் ஆன்லைன் அபராதம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மத்திய மற்றும் மாநில அரசுகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை டீசல் விலையினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளன தலைவர் ராஜவடிவேலு ஆதரவு தெரிவித்திருந்தார். அதே போல், வரும் 26 ஆம் தேதி முதலே சரக்கு புக்கிங் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வைரஸால் மனிதகுலம் பெரும் பாதிப்படையும் !!
முழு லோடு முதல் சில்லரை லோடு வரை எதுவும் ஏற்றப்படாது என்றும் கூறப்பட்டது. தமிழகத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இருக்கும் 5, 250 ஏஜெண்டுகள் புக்கிங்கினை செய்ய மாட்டார்கள் என்று கூறப்பட்டது. இதனால் ஜவுளி, பருப்பு வகைகள் உட்பட 10 கோடிக்கும் அதிகமான பொருட்கள் தேங்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக சம்மேளன நிர்வாகிகளுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்றதால் ஸ்டிரைக்கிற்கான அறிவிப்பு வாபஸ் பெறபட்டுள்ளது.