தமிழில் பிரபல நடிகையான அமலா பால் தற்போது தொடர்ந்து வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதில் ஆர்வம் கட்டி வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பாலிவுட் சிங்கர் பாவீந்தர் சிங் என்பவருடன் திருமணம் நடந்த மாதிரி புகைப்படங்கள் வெளியானது. தற்போது அது குறித்து கேஸ் போடா போவதாக அமலா பால் கூறியுள்ளார்.
அமல் பால்
மாடலிங் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். இவரின் பூர்விகம் கேரளவாக இருந்தாலும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தது தமிழகம் தான். தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் அடுத்த அவர் நடித்த மைனா திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
மேலும் பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1 வருடம் கூட ஆகாத நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும் ஏ.எல்.விஜய் வேறு ஒரு திருமணமும் செய்துக்கொண்டார்.
அதன் பிறகு அமலா பால் சுதந்திரமாக சுற்ற ஆரம்பித்தார். ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்ததற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போனார். மேலும் சில மாதங்களுக்கு முன்னாள் இவருக்கும் பாலிவுட் சிங்கர் பாவீந்தர் சிங் அவர்களுக்கும் திருமணம் நடந்தது போல புகைப்படங்கள் வெளியானது.
ஆனால் அது ஷூட்டிங் காக எடுக்கப்பட்டதை பாலிவுட் சிங்கர் பாவீந்தர் சிங் தவறாக பயன்படுத்தி கொண்டதாக அமலா பால் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக தன் பெயரை கெடுப்பதாக புகார் அளிக்க போவதாக கூறியுள்ளார்.