இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடரை ஏற்கனவே நியூஸிலாந்து அணி 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.
அகர்வால் வழக்கம் போல் ஏமாற்றம்
இந்திய அணி துவக்க வீரர் அகர்வால் 1 ரன்னில் வெளியேறினார். இதனால் வழக்கம் போல இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் விராட் கோஹ்லியும் (9) இந்த முறை ஏமாற்றினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய பிரிதிவி ஷா 40 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
ஷ்ரேயஸ் அய்யர் (62) அரைசதம் அடித்திருந்த நிலையில் கிராண்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே ஜோடி 100 ரன்கள் அடித்தது. சிறப்பாக ஆடிய ராகுல் (112) சதம் அடித்து அசத்தினார். மனிஷ் பாண்டே 42 ரன்கள் அடித்தார். முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |