தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், நாளை (ஏப்ரல் 19) காலை முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் வாக்களிக்க வருபவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் வாக்களிக்க வசதியாக 16 ‘பிங்க் பூத்’ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிக்க முன் அனுமதி பெற வேண்டுமா? உத்தரவை ரத்து செய்த ஹைகோர்ட்!!!
இதைத்தொடர்ந்து முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வர, இலவச வாகன வசதி உள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்த வாகன வசதியை பெறுவதற்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.