7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக, கடந்த மார்ச் மாதம் அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) அதிகரிக்கக்கூடும் என பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) தெரிவித்துள்ளது.
அட்ரா சக்க.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ பட டைட்டில் இதுதான்?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
அதன்படி X நகர ஊழியர்களுக்கு 27 லிருந்து 30 சதவீதமாகவும், Y நகர ஊழியர்களுக்கு 18 லிருந்து 20 சதவீதமாகவும், Z நகர ஊழியர்களுக்கு 9லிருந்து 10 சதவீதமாகவும் HRA உயர்த்தலாம் என குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.