தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை, தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த 1.63 கோடி பேர்களில் 1.6 கோடி தகுதியான குடும்ப தலைவிகளுக்கும் மட்டும் தற்போது உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், மீதமுள்ளவர்க்ளுக்கும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் உறுதி அளித்து வருகின்றனர். அதன்படி ஜூலை மாதம் முதல் 1.63 கோடி குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 கிடைக்கலாம். இதற்கிடையில் 2024 ஏப்ரல் மாத தவணை, நாளை மறுநாள் (ஏப்ரல் 15) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.