நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் மாதந்தோறும் பயனடையும் வகையில் ரேஷன் கார்டு மூலம் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் திருமணமான புது தம்பதிகள் பலரும் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் கூட புது ரேஷன் கார்டு விண்ணப்பித்த அனைவருக்கும் புது ரேஷன் அட்டை வழங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இப்போது கர்நாடக மாநிலத்தில் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் விண்ணப்பங்களும் மார்ச் 31ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் புது ரேஷன் கார்டு விநியோகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால் அதற்கு முன்னதாக புது ரேஷன் கார்டு வழங்கும் பணியை முடிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்