நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருவதால், சாலையோர கடைகளில் கூட QR மூலம் பேமெண்ட் செய்யும் வசதி உள்ளது. இதற்காக Gpay, Phonepe, Paytm போன்ற யு.பி.ஐ. செயலிகளையே அதிகமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் செயலற்ற UPI ஐடிகள் 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் முடக்க இருப்பதாக இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
அதாவது யு.பி.ஐ. ஆப்பில் வங்கி கணக்கை இணைத்துவிட்டு ஒரு வருடகாலமாக பரிவர்த்தனை ஏதும் செய்யாமல் இருப்பின், அந்த யு.பி.ஐ. ID டிசம்பர் 31 ஆம் தேதியுடன் செயலிழந்துவிடும் என எச்சரித்துள்ளனர். இந்த காலக்கெடு முடிவதற்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால், உடனடியாக பரிவர்த்தனை மேற்கொண்டு ID முடக்கப்படுவதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தி உள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மணிப்பூர் கலவரம்., பலத்த பாதுகாப்புடன் இறந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம்!!!