தற்போதைய காலகட்டத்தில் வித்தியாசமான திருமணங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தன்னை கர்ப்பமாக்கி கழட்டி விட்ட காதலனை சொல்லி அடிச்சு கில்லி மாதிரி கல்யாணம் செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வசித்து வரும் குணசேகரன் மகள் அபிநயா என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஹரி என்பவரை வெறித்தனமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் தனிமையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் காதலனிடம் மொத்தமாக தன்னை ஒப்படைத்த அபிநயா கர்ப்பம் தரிக்கிறார். இதனை தொடர்ந்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அபி கேட்டதற்கு, கர்ப்பத்தை கலைத்து விட்டு வா, அப்ப தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று ஹரி கூற, காதலனிடம் ஏமாந்த சோகம் ஏதும் இன்றி உன்னை எப்படி கல்யாணம் பண்ணி காமிக்கிறேன்? என்று சவால் விட்டார். இதனை தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அபி, காதலனை வர வைத்து விசாரணை நடத்தி இருவருக்கும் காவல்துறையே கல்யாணம் செய்து வைத்தது. சவாலை விட்டு காதலனை கரம் பிடித்த அபியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.