இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவியிடையே பல்வேறு விதமான சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு வந்தாலும், தற்போது பலாத்காரம் தொடர்பான பிரச்சினைகளும் ஆங்காங்கே வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர், தன்னுடைய கணவர் பலாத்காரம் செய்வதாக புகார் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “இந்திய தண்டனை சட்டத்தின்படி 18 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுக்கு திருமண ரீதியான பலாத்காரத்தை குற்றமாக கருத முடியாது.” என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் “‘மனைவிக்கு எதிரான இயற்கைக்கு மாறான குற்றம்” என்ற குற்றச்சாட்டில் இருந்து கணவனை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.