தற்போது நிலவிவரும் காலநிலை மாற்றத்தால் மக்கள் பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வடகிழக்கு பருவ மழையால் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பலரும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது. இப்படி உள்ளவர்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் மெடிக்கலில் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இது போன்ற உள்ளவர்களுக்கு தற்போது இந்திய மருந்தக ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது இனி வரும் நாட்களில் யாரும் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணம் மருந்துகளை சாப்பிட வேண்டாம். மேலும் இதுபோன்று சாப்பிடுவதால் “டிரெஸ் சிண்ட்ரோம்” என்ற நோய் உருவாகும். இதற்கான அறிகுறி என்னவென்றால் சொறி, காய்ச்சல், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறிய தலைவலி என்றாலும் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின்னரே சரியான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.