IPL 2024: முடிவுக்கு வந்த பும்ராவின் சர்ச்சை.. வைரலாகும் மும்பை அணியின் இன்ஸ்டா பதிவு!!

0
இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருப்பது 2024 IPL தொடர் உள்ளது. இத்தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் அரங்கேற இருப்பதை நாம் அறிவோம். கடந்த வாரம் இந்திய வீரர் பும்ரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் ஸ்டோரியை பதிவிட்டார். அந்த ஸ்டோரியில் மௌனம் சில நேரங்களில் சிறந்த பதில் என பதிவிட்டு இருந்தார்.
இதனால் மும்பை அணியில் இருந்து பும்ரா விலக உள்ளார் என்றும் விரைவில் சென்னை அணியில் இணைவார் எனவும் கருத்துக்கள் உலா வந்து கொண்டிருந்தன. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணியானது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில் SILENCE IS SOMETIMES THE BEST ANSWER ஆகிய வார்த்தைகளை எழுதி பும்ராவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது பும்ரா தொடர்ந்து மும்பை அணிக்காக  விளையாடுவார் என்பது தெளிவாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here