தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களுக்கு, “தீபாவளி பண்டிகை”-ஐ முன்னிட்டு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், பல நிறுவன ஊழியர்களும் போனஸ் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் ஓய்வூதியம் வாரிய கூட்டம் நடத்தப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
அதில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது தொடர்பாக சங்கம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் கூறியுள்ளனர்.