கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பள்ளிமாணவர்களுக்கு பாடங்கள்கற்பிக்க தமிழக அரசு தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை வீடியோமுறையில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தொலைக்காட்சி வாயிலாக பாடம்:
அதற்காக தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை வீடியோமுறையில் மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தினை நேற்று தமிழக முதலமைச்சர் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார் . இதன் மூலம் பள்ளிமாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி இரண்டரை மணிநேரம் பாடம் நடத்தப்படும்.
நேர அட்டவணை:
இந்ததிட்டம் மூலமாக எந்தெந்த பாடம் எப்போது நடத்தப்படும் என்ற அட்டவனையையும் அரசு வெளியிட்டு இருக்கிறது .
காலை 6.00 மணிக்கு நீட், JEE போன்ற படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாட்டனிபாடமும், 7.00 – 8.00 மணிவரை இயற்பியல் பாடமும் , 8.00 – 8:30 மணிவரை 10ம் வகுப்பிற்கான தமிழ்பாடமும், 8:30 – 9.00 மணி வரை 10ம்வகுப்பு ஆங்கிலபாடமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இது போன்று ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கும் ஒரு பாடம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்திற்கும் அரைமணி நேரம் பள்ளி மாணவர்களுக்காகவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு 1 மணிநேரமும் பட்டியலானது வகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடங்கள் இன்று வீடியோ வடிவில் மாணவர்களை சென்றடைகிறது.