உலக இளைஞர்திறன் தினத்தையொட்டி டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி காணொளிமூலம் உரையாற்றினார். அவர்நாட்டின் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இளைஞர்களுக்குகான அறிவுரை:
“இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தவேண்டும். ஒருதிறமையான நபர் தனது வாய்ப்புகளை எந்த வகையிலும் விட்டுவிடக்கூடாது. திறமை என்பது வெறும் பணம் சம்பாதிப்பதற்கான வழிமட்டுமல்ல; அது உற்சாகம் அளிக்கக்கூடியதும் கூட; வேலைமட்டுமின்றி செல்வாக்கு, ஊக்கத்தையும் வழங்குகிறது. புதிய தொழில் நுட்பங்களை கற்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் ” என்று அவர் கூறினார்.
திறனை வளர்க்க வேண்டும்:
மேலும் அவர் கூறுகையில் இளைனர்களின் பலமாகதிறன் மற்றும் கற்றுக்கொள்வதற்கான திறன் ஆகியவற்றை சுற்றிகாற்றினார். போட்டி நிறைந்த இவ்வுலகில் திறனை வளர்த்துக் கொள்வது மிக முக்கியம் என்று அவர் கூறினார். உலகம் முழுவதும் பல விதமான வேலை கலாச்சாரம்உள்ளது. அதனால் இளைஞர்கள் பல விதமான திறனை வளர்த்துக்கொள்கிறார்கள் .
இந்ததிறன் என்பது நமது பொக்கிஷம் என்றும் மேலும் அதனை நம்மிடம் இருந்து பறித்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார். நமது திறன் தான் நம்மை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்று கூறினார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்கமத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.