கோலிவுட் திரையில் ”அஞ்சாதே” என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் தான் இயக்குனர் மிஷ்கின். மேலும் தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் தற்போது ஒரு நடிகராகவும் களமிறங்கியுள்ளார். அந்த வகை தற்போது இவர் தளபதியின் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வரும் வில்லன்களில் ஒருவராக கமிட்டாகியுள்ளார். இதுபோக இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு2 படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரில்லீஸாக உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி திரையுலகில் பிஸியாக இருந்து வரும் இவர் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதாவது 14 வருடங்களாக இவருடைய மனைவியுடன் இவர் பேசுவதில்லையாம். மேலும் அவ்வப்போது தன் மகளுடன் பேசும்போது ஒரு சில வார்த்தைகள் போனில் தனது மனைவியுடன் பேசி கொள்வாராம்.
ச்சீ.., நீயெல்லாம் மனுஷனா.., குணசேகரன் செய்த சதி வேலை.., கிழித்து தொங்கவிட்ட ரேணுகா!!!!
இப்படி இருக்கையில் திருமணம் முடித்து குழந்தைகள் பெற்றுக் கொண்ட பிறகும், ஆண்கள் & பெண்கள் இருவரும் தங்களது திருமண உறவை முறித்துக் கொள்வதற்கு சில காரணங்கள் இருக்கு என கூறியுள்ளார். அதாவது சில நேரங்களில் நம் வாழ்க்கை துணைவியர் செய்யும் செயல் நமக்கு அதீத கோபத்தை கொடுக்கும். அந்த நேரத்தில் நம் வாயால் அவர்களை துரோகம் செய்து விட்டதாக சொல்லி திட்டி விடுவோம். ஆனால் அப்படிபட்ட துரோகம் எல்லாம் சினிமாவில் தான் காட்டுவார்கள் என கூறியுள்ளார்.