தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 கோடி மின் இணைப்புகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம், வீடு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானிய திட்டத்திற்கான மத்திய அரசின் பங்கீடுகளை மாநில அரசுகள் தொடர்ந்து பெற “ஸ்மார்ட் மீட்டர்” திட்டத்தை மின்வாரியம் செயல்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன்படி தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் “ஸ்டேடிக்” என்ற மின் மீட்டரை எடுத்து விட்டு ஸ்மார்ட் மீட்டரை பொருத்த மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் நுகர்வோர்களின் மின் பயன்பாடுகளை ஸ்மார்ட் மீட்டர் தானாகவே கணக்கெடுத்து மின்வாரிய சர்வர்களுக்கும், நுகர்வோர்களின் மொபைல் எண்ணுக்கும் பயன்பாடு மற்றும் கட்டணம் குறித்து தகவல் அனுப்பிவிடும்.
தமிழக பள்ளிகள் கவனத்திற்கு., இனிமேல் இது கட்டாயம் நடக்கும்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
குறிப்பிட்ட கடைசி தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் விநியோகம் நிறுத்தப்படும். கட்டணம் செலுத்திய பிறகு இணைப்பு வந்துவிடும். இந்த திட்டத்தை மாவட்ட வாரியாக 3 கட்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு சார்பில் ஒரு மீட்டருக்கு தலா ரூ.6,000 என நிதியுதவி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மின்வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.