இந்திய திரையுலகில் வசீகர அழகில் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். 1994 ஆம் ஆண்டு இவருக்கு உலக அழகி என்ற மகுடம் சூட்ட பட்டதற்கு ஏற்ப 50 வயதை தொட்ட இவர் இன்னும் அதே அழகிய தோற்றத்தில் இருந்து வருகிறார். மேலும் பல வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் மணிரத்னத்தின் ”பொன்னியின் செல்வன்” படத்தில் என்ட்ரி கொடுத்து அசத்தியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இவர் தனது மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள பாலோவ் செய்து வரும் பியூட்டி டிப்ஸ் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரவும் பழக்கம் வைத்திருக்கிறாராம்.
தமிழக மக்களே.., இதை கரெக்ட்டா செய்யலைன்னா பவர் கட்.., , மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!!
இதோடு மாதத்தில் ஒரு முறை முகத்துக்கு கடலை மாவுடன் சேர்த்து தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ் பேக்காக அப்ளை செய்து வருகிறாராம். மேலும் தயிருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு scrub செய்து வருகிறாராம். இதுபோக ஆலிவ் ஆயில் மற்றும் சந்தன ஆயில் போன்றவற்றை பயன்படுத்தி முகத்திற்கு மசாஜ் செய்வாராம். கோடை காலம் வந்துவிட்டால் வெள்ளரிக்காயை பேஸ்ட்டாக அரைத்து முகத்திற்கு அப்ளை செய்து கொள்வாராம்.