தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனால் தமிழக பள்ளிகளில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி பேருந்துகளில் மாணவர்கள் அமரும் இருக்கை, கைப்பிடி, படிகள் சரியாக உள்ளதா என அந்தந்த மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன் படி காரைக்காலில் பள்ளி, கல்லூரி பேருந்துகளை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சந்திரபிரியங்கா, ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரி பேருந்துகள் ஆய்வு செய்யப்படுவது போல இந்த ஆண்டும் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு. இதில் மாணவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பேருந்துகளும் தயார் நிலையில் உள்ளது.
எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் கணவரா இது?? குண்டாகி இப்படி இருக்காரே?? புகைப்படம் உள்ளே!!
மேலும் பேசிய அவர், அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து துறை மூலம் பள்ளி, கல்லூரி பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளை 2 மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும். இது போன்று செய்வதன் மூலம் இனி வரும் நாட்களில் விபத்துகள் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்துகள் சரியான முறையில் உள்ளதா என பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.