டப்பிங் பணிகளை முடித்த ‘மாவீரன்’ படக்குழு….,அடுத்து தியேட்டர் ரிலீஸ் தான்….,

0
டப்பிங் பணிகளை முடித்த 'மாவீரன்' படக்குழு....,அடுத்து தியேட்டர் ரிலீஸ் தான்....,

பிரபல தமிழ்ப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைக்கிறார். அந்த வகையில், ‘மாவீரன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படத்தை வெளியிடுதற்கான இறுதி கட்ட வேளைகளில் படக்குழு தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எதிர்பாராத விதமாக நடந்த கார் விபத்து., இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இர்பான் கொடுத்த உறுதி!!

அதன்படி, கடந்த மாதம் 29 ஆம் தேதியன்று ‘மாவீரன்’ திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் துவங்கிய நிலையில் இன்று (ஜூன் 5) அந்த பணிகள் முடிவு பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு இணையத்தில் வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதியன்று திரையரங்குகளுக்கு வர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here