இந்தியாவில், குடும்ப அட்டைகளை வைத்துள்ள ஏழை எளிய மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலைக்கு ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம், அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கி பயன் பெற்று வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில், மேலே குறிப்பிட்ட பொருட்களுடன் தற்போது கேழ்வரகு வழங்கும் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் அட்டை தாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அரசு பல மாதங்களாகவே அறிவுறுத்தி வருகிறது.
இந்த இணைப்புக்கான கடைசி தேதி ஜூன் 30ம் தேதி என தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஜூன் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்க வில்லை என்றால் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.