IPL தொடருக்கான இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான CSK அணி குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கோப்பையை 5 வது முறையாக தட்டிச் சென்றனர். கடந்த முறை பிளே ஆப் சுற்று கூட தகுதி பெறாமல் வெளியேறிய CSK அணி இந்த ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த வெற்றியை CSK அணி வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் விடிய விடிய கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்படி என்னதான் ஆட்டம் பாட்டம் இருந்தாலும் CSK, GT அணியில் இடம் பெற்ற இந்திய வீரர்கள் அன்று இரவே இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்த விஷயம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ளது.
இதனால் IPL போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொரு இந்திய வீரர்களும் போட்டி முடிந்தவுடன் உடனடியாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் இவர்களைத் தொடர்ந்து வெற்றியை கொண்டாடிய CSK மற்றும் GT அணியில் உள்ள இந்திய வீரர்களும் கிளப்பியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்தில் பயிற்சி பெற்று வரும் நிலையில் இந்திய அணி இவர்களை வீழ்த்தி வெற்றியை சொந்தமாக்குவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.