இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில், 4 அலைகளாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த மாதங்களில் மீண்டும் மெதுவாக உயரத் துவங்கியது.
இதன் மூலம் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும், முறையான கட்டுப்பாடுகள் மூலம் நோய்த்தொற்று மீண்டும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில், தமிழகத்திலும் தினசரி 500க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனால் மக்கள் மீண்டுமாக நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.
மழை காரணமாக IPL இறுதிப்போட்டி பாதிப்பு…..,மீண்டும் சிக்கலில் CSK அணி…,
இதன் மூலம், கொரோனா பரவல் பாதிப்புகள் தற்போது முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் வெறும் 5 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.