நாடு முழுவதும் தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் ஓய்வு பெறும் போது தாங்கள் பனிக்காலத்தில் சேமித்து வைத்திருந்த விடுமுறைக்கான ஊதியத்தை பணமாக பெற்று வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த தொகை ரூ.3 லட்சத்துக்கு மேல் இருந்தால் உரிய வருமான வரி கட்ட வேண்டும் என கடந்த 2002ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த உச்ச வரம்பை உயர்த்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை ஊதியம் ரூ.25 லட்சம் வரை இருந்தாலும் அதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேல் விடுமுறை ஊதியம் பெறும் பட்சத்தில், அந்த பணியாளரின் வருமான வரி வரம்ப்புப்படி கணக்கிட்டு உரிய வரியை செலுத்த வேண்டும் என மத்திய வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.