தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது வெற்றிக்கும் கண்மணிக்கும் இடையே நடக்க இருந்த திருமணம் தடைபட்டு போனது. இத்தனை நாள் கண்மணி செய்த பித்தலாட்டங்கள் தெரிய ஆரம்பிக்க எப்படியோ தன் அப்பா மீது பழியை போட்டு சமாளித்து விட்டார்.
இதில் இன்னொரு பெரிய விஷயம் என்னவென்றால், வெற்றிக்கு அபியை பற்றிய உண்மைகள் தெரிந்து விட்டது. அதாவது அபிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், தருண் அவரது அண்ணன் என்றும் தெரிந்து கொண்டார். இப்படி இருக்க இப்பொழுது சுடர் தான் தனது மகள் என வெற்றி உணரும் தருணம் வந்து விட்டது. வெற்றிக்கு கொஞ்சம் சந்தேகம் இருக்க தான் செய்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமின்றி இன்றைய எபிசோடில் வெற்றி வீட்டை விட்டே வெளியேற கண்மணி ஏதேதோ டிராமாவை போட்டு தடுத்து விட்டார். இந்நிலையில் தான் வெற்றி அபியின் பேச்சை காது கொடுத்து கேட்க ஆரம்பிப்பாராம். இருவருக்கும் பெரிய சண்டையே வர ஆரம்பிக்க சுடர் தான் வெற்றியின் மகள் என்ற ரகசியம் உடையுமாம். இனி வரும் எபிசோடுகளில் எப்படி இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதை வைத்து தான் கதை நகருமாம்.