நாடு முழுவதும் பழங்குடியின மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரன் இனத்தை பழங்குடியின சமுதாயத்தில் 37 வது பட்டியலில் இணைத்துள்ளதாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அரசாணை பிறப்பித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து நரிக்குறவர் மற்றும் குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி சான்றிதழை ரத்து செய்ய அனைத்து வருவாய் கோட்டாட்சியர், சார் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு புதிய மின் வடிவிலான பழங்குடியின சாதி சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஐயோ., ஷைனிங் மேனி தாறுமாறா இருக்கு., அதை தாராளமா காட்டி கிறுகிறுக்க வைக்கிறீங்களே சாக்ஷி!!
இதன்மூலம் இச்சமூகத்தை சேர்ந்தவர்கள் அரசு வேலை, கல்வி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு சலுகைகளை பெற இருப்பதால் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.