இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கமானது கடந்த சில ஆண்டுகளை விட அதிகமாக இருந்தது. இதனால், பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு, தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 1 ஆம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஜூன் 5 ம் தேதியில் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதையடுத்து, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று (மே 26) ஒன்று முதல் 12 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் புதிய கவ்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 7ம் தேதி தொடங்கும் என அறிவித்திருந்தார்.
இந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ்., அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!!
இந்த கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், பெற்றோர்கள் கோடை வெயிலின் தாக்கத்தால் பல வித அலர்ஜி, வேர்க்குரு உள்ளிட்ட பல வகை நோய்களுக்கு குழந்தைகள் உள்ளாகின்றனர். இதனால், கூடுதலாக 10 நாட்கள் கோடை விடுமுறையை நீட்டித்தால் மாணவர்கள் எந்தவித சிரமமுமின்றி புதிய வகுப்புகளுக்கு செல்வார்கள் என சில பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.