இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது, இறுதிப் போட்டியை எதிர்நோக்கி உள்ளது. இந்த இறுதிப் போட்டியானது, வரும் மே 28ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இன்று(மே 26) நடைபெற இருக்கும் கடைசி பிளே ஆப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி CSK அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் மோதும். இந்த இறுதிப் போட்டியின் மூலம் CSK யின் தல தோனி தனித்துவமான சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
அசைவ சுவையில் சைவ முட்டை கிரேவி.., மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ரெசிபி!!
அதாவது, ஐபிஎல்லில் 10 வது முறையாக CSK அணியை இறுதிப் போட்டிக்குள் அழைத்து சென்ற இவருக்கு, இந்த இறுதி போட்டியானது 250 வது போட்டியாக அமைய உள்ளது. இதுவரை 249 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 5,082 ரன்களை குவித்துள்ளார். மேலும், CSK அணியை 4 முறை சாம்பியன் பட்டம் வெல்லவும் முக்கிய பங்கு வகித்த உள்ள இவர், தற்போது 5வது முறையாக அணிக்கு பட்டத்தை வென்று தருவார் என மிகவும் எதிர்பார்க்கபடுகிறது.