தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் மிஷ்கின். தற்போது இவர் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார். ரிலீசுக்கு ரெடியாகி வரும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது, விஜயுடன் 20 வருடங்களுக்கு பிறகு இணைந்திருக்கிறேன். இருப்பினும் அப்போது இருந்த விஜய் தான் இப்பவும் இருக்கிறார். சிறிதளவு கூட அவர் மாறவில்லை. அவருக்காக ஒரு கதையை எழுதி அவரிடம் கதையை போய் சொல்வேன். அப்படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கண்டிப்பாக எடுத்து செல்லும்.
ஆனால் அதற்கு இன்னும் ஆண்டுகள் ஆகலாம். நான் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தை பார்த்து, ஏன் இந்த கதையை என்கிட்ட சொல்லல என்று கழுத்தை நெரித்தார் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் விஜய் -மிஷ்கின் காம்போவுக்காக ரசிகர்கள் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.