மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இந்த கல்வி கொள்கையை அமல்படுத்த பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் மாநில கல்வி கொள்கையை தயாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
கடந்த ஓராண்டாக நடந்து வந்த தயாரிப்பு பணி மே மாதம் நிறைவடையும் என எதிர்பார்த்த நிலையில் கூடுதலாக 4 மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் இந்த குழுவில் காயிதே மில்லத் மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானமணி மற்றும் சென்னை பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் பழனி ஆகியோர் உறுப்பினர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
காணாமல் போன சுனைனா., தீவிர விசாரணையில் போலீசார்., திடுக்கிடும் தகவலால் போலீசார் அதிர்ச்சி!!
இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் மாநில கல்வி கொள்கை தயாரிப்பு பணிக்கான அறிக்கைகள் அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.