உலகின் முன்னணி சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா தற்போது பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, மெட்டா நிறுவனம் வரும் வாரத்தில் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த பணிநீக்கம் ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த நாட்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார பின்னடைவுகள் காரணமாக மெட்டா நிறுவனம் சுமார் 15 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.
இனிமேல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது…..,ரிசர்வ் வங்கி அதிரடி….,
இந்த நிலையில், அடுத்த கட்ட பணிநீக்கத்தை திட்டமிட்டு வரும் இந்நிறுவனம் சுமார் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது நடந்தால், ஒட்டுமொத்தமாக 21 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனம் என்ற பெயரை மெட்டா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.