கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிதாக ரூ.2000, ரூ.200 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், கடந்த 6 ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்தியாவில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், அக்டோபர் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு….,வெற்றி வாய்ப்பு யாருக்கு?
இப்போது, இந்திய ரிசர்வ் வங்கி கிளீன் நோட் பாலிஸி என்ற திட்டத்தின் கீழ் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் ரூ.2000 நோட்டுகளை வெளியிடுவதை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகிறது.