ஒருநாள் உலகக் கோப்பைக்காக பிசிசிஐ போடும் திட்டம்…, வெளியான முக்கிய அப்டேட்!!

0
ஒருநாள் உலகக் கோப்பைக்காக பிசிசிஐ போடும் திட்டம்..., வெளியான முக்கிய அப்டேட்!!
ஒருநாள் உலகக் கோப்பைக்காக பிசிசிஐ போடும் திட்டம்..., வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் 10 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடத்தை பிடிப்பதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18ம் தேதி முதல் ஜூலை 9ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் பிறகு அக்டோபர் முழுவதும் இந்தியாவில் தான் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதனால், இந்த உலக கோப்பையை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டியது பிசிசிஐ முக்கிய கடமையாக மாறி உள்ளது. இதையடுத்து, பிசிசிஐயானது வரும் மே 27ம் தேதி அகமதாபாத்தில் சிறப்பு பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

control இல்லாத கிளாமரில் தெறிக்கவிடும் எதிர்நீச்சல் நடிகை.., பார்த்து ஏங்கி தவிக்கும் இளசுகள்!!

இந்த கூட்டத்தில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான பணிக்குழு உருவாக்குதல், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மானியக் குழுவின் உருவாக்குதல், மகளிர் பிரீமியர் லீக்கின் குழு உருவாக்குதல், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு கொள்கையின் அங்கீகாரம் அளித்தல் மற்றும் மாநில அணிகளில் பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமனம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here