தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதாவது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே துணை தேர்வு எழுத அனுமதி அளிக்கும் விதி இருந்தது. ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால், துணை தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால், மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும் 11 ஆம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அடுத்த 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் மேல்முறையீடு செய்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பைக்காக பிசிசிஐ போடும் திட்டம்…, வெளியான முக்கிய அப்டேட்!!
அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணை தேர்வு எழுத அனுமதி இல்லை என்கிற விதியை தனி நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை என கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிர்வாகம் மேல்முறையீடு வழக்கு செய்துள்ளது. இதற்கு, மாணவர்கள் தரப்பு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.