தற்போதைய காலகட்டத்தில் பொது தேர்வு மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் ரிசல்ட் பயத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மனஅழுத்ததால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் தமிழக அரசாங்கம் மனஅழுத்ததில் இருக்கும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் விதமாக ஒரு தொலைபேசி நம்பரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது 12ம் வகுப்பு மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவை நினைத்து மன அழுத்தத்துடன் இருந்தால் உடனே 104 நம்பருக்கு அழையுங்கள்.
தனது இரண்டாவது தாரத்தின் கணவருடைய மகளுடன் சரத்குமார்…, புகைப்படம் உள்ளே!!
அப்படி நீங்கள் அழைக்கும் நீங்கள் எந்த அளவுக்கு மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதை வைத்து உங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும். எனவே நீங்கள் பயத்தோட அல்லது மன அழுத்தத்தோட இருந்தீர்கள் என்றால் தப்பான முடிவுகளை எடுக்காமல், 104 தொலைபேசிக்கு அழையுங்கள் என்று தேசிய நல வாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.